துபாய், இந்தியா இடையேயான பயணத் தடை நீக்கம்!

Share this News:

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கியுள்ள அமீரகம் , இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பயணத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply