தெலங்கானா பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசால் நியமிக்கப்பட உள்ள கமிட்டிக்கு குறைந்தபட்ச காலவரம்பு விதிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.மேலும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசால் அமைக்கப்பட உள்ள கமிட்டிக்கு அமைச்சர் சிதம்பரம் தலைவராக இருக்கக் கூடாது என தெலுங்கு தேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 



