வரும் 6ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடக்கவுள்ளது. இம்மாநாடு இரண்டு தினங்கள் நடைபெறும் என்றும் முதல் நாள் 6ம் தேதி விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பிரதமர், மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக பிரதமர் அலுவலக குறிப்பு தெரிவிக்கிறது
இரண்டாம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சம்மந்தமாகவும், கடலோரப்பாதுகாப்பு, நக்சல் தீவிரவாத முறியடிப்பு சம்மந்தமாகவும் பிரதமர் மன்மோகன் சிங் மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளார். இந்தியா முழுவதும் தொடர் விலைவாசி உயர்வினால் அனைத்து மாநில மக்களும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், பல மாநில முதல்வர்கள் இதனை வலியுறுத்தி பேசுவார்கள் என்றும் தெரிகிறது.இம்மாநாடு காடந்த 27ம் தேதி நடக்கயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 



