மரக்காணம் அருகே கல்லூரி மாணவர் ராகிங் கொடுமையால் தீக்குளித்து இறந்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அனுமந்தையைச் சேர்ந்த குப்புசாமியின் மகன் ஸ்ரீதர் (20). பொம்மையார்பாளையத்தில் உள்ள சித்தர் சிவஞானி ஆண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் அவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் தன் தந்தையிடம் தெரிவித்தார். அவரது தந்தை குப்புசாமி கல்லூரிக்குச் சென்று முதல்வரிடம் புகார் செய்தார். கேலி செய்த மாணவர்களின் பெயரையும் தெரிவித்தார்.
இதனால் ராகிங் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே வழக்கம் போல் ஸ்ரீதர் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை சென்றார். ஆனால் பிற்பகலில் வீடு திரும்பிவிட்டார்.
அப்போது சோகமாக காணப்பட்ட அவர், மாலையில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



