கோவையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் மற்றும் சிடி-க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு அரங்குகளை போலீஸôர் சனிக்கிழமை சோதனையிட்டனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் மற்றும் அவரது சிடி-க்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உதவி ஆணையர் பி.முத்துராஜ் அந்த சிடி-க்களை பறிமுதல் செய்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



