சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவருமான சரத்பவார் நேற்று ஞாயிற்றுக்கிழமை(08/02/2010) அன்று சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் உடனிருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்களைச் சேர்ப்பதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியை சுமுகமாக நடத்துவது தொடர்பாக தாக்கரேவை சந்தித்ததாக சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசியலில், எதிரெதிர் கூட்டணியில் இவ்விரு கட்சிகளும் உள்ள நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 


