நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி - மம்தா

E-mail அச்செடுக்க
"நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி" என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும்,​​ மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி சூசகமாகக் ​குறிப்பிட்டுள்ளார்.

12 புதிய ரயில்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம், கான்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07/02/2010) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயிலைத் துவக்கி வைத்து, மம்தா பானர்ஜி பேசும் போது, "உத்தரப் பிரதேசம் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் ஆகும். ஜவாஹர்லால் நேரு,​​ லால் பகதூர் சாஸ்திரி,​​ இந்திரா காந்தி,​​ ராஜீவ் காந்தி உள்ளிட்ட பிரதமர்களை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது.​ சோனியா காந்தியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரே.​ உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைவரே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவராக இருப்பார்" என ராகுல் காந்தியைச் சூசகமாக குறிப்பிட்டு பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search


விளம்பரம்