இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 03:21:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வரிச் செய்திகள்: மாயாவதிக்கு மீண்டும் ரூ.18 லட்சத்தில் பணமாலை பகுஜன் சமாஜ் கட்சியினர் அதிரடி --> ராகுல் பிரியங்கா திருச்சி வருகை! காங்கிரஸார் உற்சாகம் --> பாகிஸ்தானில் 42 தீவிரவாத இயக்கங்கள் – அந்தோணி --> பென்னாகரம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் – தேர்தல் ஆணையம் --> ஹிலாரி – நிருபமாராவ் சந்திப்பு --> உகாண்டாவில் பயங்கர கலவரம் ராணுவம் குவிப்பு --> காங்கிரசுக்கு எதிராக 3 கட்ட போராட்டம் மாயாவதி அறிவிப்பு --> காமன் வெல்த் குத்து சண்டை போட்டி விஜயேந்தர் தங்கம் வென்றார் --> மோட்டார் வாகன தொழிற்சாலை தலைநகரமாக சென்னை மாறும் – கருணாநிதி --> ஃபொன்சேகா வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-->மக்களவை ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஒத்திவைப்பு! --> ஃபொன்சேகா மீது ராணுவ விசாரணை தொடங்கியது! --> ஐபிஎல் கிரிக்கெட் மூலம் 580 கோடி இலாபம்! --> காவல்துறை விசாரணைக்கு சென்றவர் தூக்குபோட்டு சாவு! --> ஜெருசெலத்தில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் காவலர்களுடன் மோதல்! --> சூறாவளியால் பாதிக்கபட்ட ஃபுஜி தீவு தேசிய பேரழிவாக அறிவிப்பு! --> மத்திய சீனா சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலி! --> கிழக்கு கடற்கரை சாலை மேலும் 104 கிலோமீட்டர் விரிவாக்கம்! --->

ரூ.1655 கோடி செலவில் “எக்ஸ்பிரஸ்” சாலை - ஜி.கே.வாசன்

E-mail அச்செடுக்க
சென்னை துறைமுகம்- மதுவாயல் இடையே அமைக்கப்படும் உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலை, மற்றும் எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.

இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சென்னை துறைமுக தலைவர் கேப்டன் சவான், எண்ணூர் துறைமுக தலைவர் வேலுமணி, மத்திய கப்பல்துறை செயலாளர் மோகன்தாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை துறைமுகம்-மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலை, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துதல், நிவாரணம் வழங்குதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மறுகுடி அமர்த்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தற்போது கூடுதல் செலவும், கால தாமதமும் ஏற்பட்டுள்ளது.

எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டத்தை ரூ.150 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் கூடுதலாக திருவொற்றியூர்-பொன்னேரி -பஞ்சட்டி ஆகிய இடங்களுக்கு 4 வழி சாலை அமைப்பது உள்பட பல்வேறு புதிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த சாலை மேம்பாட்டு திட்ட மதிப்பீடு ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. துறைமுகம்-மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு ரூ.1655 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நிலம் கையகப்படுத்துதல், மற்றும் மறு குடியேற்றத்துக்கு ரூ.310 கோடி செலவிடப்படுகிறது. இந்த தொகையை சென்னை துறைமுகமும், தமிழக அரசும் சம பங்களிப்பாக வழங்கும் இது விரைவாக நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் முடியும்.

இத்திட்டங்களை நிறை வேற்றுவதில் இருந்த சிறுசிறு தடங்கல்கள் நீங்கி விட்டன என்று அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

செவ்வாய், 16 மார்ச் 2010 17:27
சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37

Search