இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 03:21:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வரிச் செய்திகள்: மாயாவதிக்கு மீண்டும் ரூ.18 லட்சத்தில் பணமாலை பகுஜன் சமாஜ் கட்சியினர் அதிரடி --> ராகுல் பிரியங்கா திருச்சி வருகை! காங்கிரஸார் உற்சாகம் --> பாகிஸ்தானில் 42 தீவிரவாத இயக்கங்கள் – அந்தோணி --> பென்னாகரம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் – தேர்தல் ஆணையம் --> ஹிலாரி – நிருபமாராவ் சந்திப்பு --> உகாண்டாவில் பயங்கர கலவரம் ராணுவம் குவிப்பு --> காங்கிரசுக்கு எதிராக 3 கட்ட போராட்டம் மாயாவதி அறிவிப்பு --> காமன் வெல்த் குத்து சண்டை போட்டி விஜயேந்தர் தங்கம் வென்றார் --> மோட்டார் வாகன தொழிற்சாலை தலைநகரமாக சென்னை மாறும் – கருணாநிதி --> ஃபொன்சேகா வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-->மக்களவை ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஒத்திவைப்பு! --> ஃபொன்சேகா மீது ராணுவ விசாரணை தொடங்கியது! --> ஐபிஎல் கிரிக்கெட் மூலம் 580 கோடி இலாபம்! --> காவல்துறை விசாரணைக்கு சென்றவர் தூக்குபோட்டு சாவு! --> ஜெருசெலத்தில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் காவலர்களுடன் மோதல்! --> சூறாவளியால் பாதிக்கபட்ட ஃபுஜி தீவு தேசிய பேரழிவாக அறிவிப்பு! --> மத்திய சீனா சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலி! --> கிழக்கு கடற்கரை சாலை மேலும் 104 கிலோமீட்டர் விரிவாக்கம்! --->

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க விசுவ இந்து பரிஷத் எதிர்ப்பு!

E-mail அச்செடுக்க
மேற்கு வங்க மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை விசுவ இந்து பரிஷத் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று விசுவ இந்து பரிஷத் கூறியுள்ளது.

இதர பிற்பட்டோர் பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் மேற்கு வங்க கம்யூனிஸ்டு அரசு இந்து மதத்தில் நலிந்த பிரிவினராக உள்ளவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் அம்மாநில அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி, இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அதே நாளில், மேற்கு வங்க அரசு அதனைவிட அதிகமாக இட ஒதுக்கீடு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் அரசியல் செல்வாக்கை இழந்து வருவதால், அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

செவ்வாய், 16 மார்ச் 2010 17:27
சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37

Search