இந்தியாவில் முதன்முறையாக காகிதம் இல்லா மின் நீதிமன்றம் டில்லியில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டது.மாவட்ட அளவில் தொடங்கப்பட்டுள்ள இந்த நீதிமன்றம் டில்லியில் உள்ள கர்கர்டூமா வளாகத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் கார்க் தலைமையேற்க தொடங்கப்பட்டது.
டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா இதனை தொடங்கி வைத்தார். மற்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மின் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், இந்த நீதிமன்றங்கள் ஒளிவு மறைவற்றவையாக இருக்கும் என்று நீதிபதி ஏ.பி. ஷா கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



