இராணுவப் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இலங்கை ராணுவத்தளபதி சரத் பொன்சோகவின் விடுதலையை வலியுறுத்தி கையொப்பங்களைப் பதிவு செய்யத் தொடங்கப்பட்ட
இணைய தளத்தை தடைசெய்ய தேசிய தொலைத் தொடர்புகள் ஆணையக் குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஜே.வி.பி. தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் இத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தொடங்கப்பட்ட பொன்சேகாவின் விடுதலைக்கான கையொப்பங்களைப் பதிவு செய்யும் www.freesarathfonseka.com ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே 3000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



