பீகார்: ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனரான சாது யாதவ் பீகார் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். சமீபத்தில் நிறைவேறிய பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவரின் மைத்துனர் லாலு பிரசாத் யாதவும் மகளிர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக சாது யாதவ் செயல்பட்டதைத் தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக உங்களை கட்சியை விட்டு ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு விரைவில் அவருக்கு நோட்டீசும் அனுப்பப்படும் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



