வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகள் பதிவாகி இருந்த இந்த பூகம்பம், மேகாலயாவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை 4.50 மணிக்கு உணரப்பட்டது.
அதேபோல், இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது சேதாரமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
மேற்கு பாப்புவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 342 கிமீ தொலைவை மையம் கொண்டு,இன்று பகல் 11.53க்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக இந்தோனேசிய பூகம்ப ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



