சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.
இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்று விளங்கவில்லை.
தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்களில் பலர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே. தற்போதைய முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவரும்கூட சினிமா பின்னணி கொண்டவர்கள்தான். பாட்சா படவெற்றிவிழாவில் ரஜினிகாந்த் பேசிய மேடைப்பேச்சை பரபரப்பாக்கி அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஊடகங்கள் பகை வளர்த்தது ஒருபக்கம் என்றால், இவரும் தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' என்ற பெயரில் ரசிகர்களை உசுப்பேற்றினார். இவரது வசனங்களை நம்பிய ரசிகர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வந்து தங்கள் துயரங்களைத் தீர்த்து வைப்பார் என்று மனதார நம்பினர்.
சிலமாதங்களுக்கு முன்பு 'ராணா' படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிப்படைந்ததால் சிங்கப்பூரில் சிகிச்சைக்குச் சென்றுவந்ததை பத்திரிக்கைகளும், சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் மணிக்கொருமுறை தலைப்புச் செய்திபோல் வெளியிட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட எவரும் பூரண சுகமடைய விரும்புவது மனித இயல்பே என்றாலும் அவரைவிட கடுமையான நோயுற்றவர்களைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள் ரஜினிக்குக் கொடுத்த அசாதாரண விளம்பரங்களை அவரே விரும்பியிருக்க மாட்டார்.
அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துவந்த கன்னடமொழி பேசுபவராக இருந்தபோதிலும் திரைப்படங்களில் மட்டும் தமிழர்களைப் போற்றும் புண்ணியவான் இவர். தமிழகத்திற்குக் கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தரமறுத்தை எதிர்க்கும் முகமாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, திரைத்துறையினரும் நெய்வேலியில் உண்ணா விரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டினர். கன்னடரான ரஜினிகாந்த் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்தவுடன், சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசுகளாக தமிழகத்தில் நடித்துச் சேர்த்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ளதைக் காப்பாற்றபோட்ட நாடகமே அது என்பதை எந்த ஊடகமும் சொல்லவில்லை.
காவிரி பிரச்சினைக்கும் அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டுமென்று தனது பங்காக ஒரு கோடி ரூபாயைத் தானம் செய்தவர், தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சினை இருமாநில மக்களிடையேயான பிரச்சினையாக்கப்பட்டபோதிலும் வாய்திறக்காததன் மர்மம் என்னவோ? இந்தக்காலத்தில் ஒரு கோடி ரூபாயைக் வழங்க முன்வந்ததே பாராட்டப்பட வேண்டியதுதான் என்று சொல்பவர்கள், அரசுக்கு இவர் கொடுக்கவேண்டிய கோடிக்கணக்கான வருமான வரிபாக்கியை அறிவார்களோ என்னமோ?!
சென்னையிலும் தமிழகத்திலும் தாய்ப்பாலுக்கு வழியில்லாத குழந்தைகள் லட்சக்கணக்கிலிருக்கும்போது இவரது கட்அவுட் பிம்பங்களுக்குக் குடம்குடமாக இவரது ரசிகர்கள் பால் வார்த்ததை என்றேனும் கண்டித்துள்ளாரா? பஞ்ச் டயலாக்கை நம்பி அதிமுக, பாமகவினருடன் பகையாளிகளாகிப்போன இவரது கட்சிசார்பற்ற ரசிகர்களைப்பற்றி கவலைப்படாமல் "நான் யானையல்ல; குதிரை" என்று வசனம்பேசி அதிமுகவை மட்டும் சமாதானப்படுத்தியதன் பின்னணியில் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி இல்லாமலில்லை!
முன்பு முதல்வர் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியதையும், இந்துமத கடவுளர்கள் படங்களை வேறுநோக்கத்திற்காக சித்தரிப்பதையும் கண்டித்து குரலெழுப்பிய சங்பரிவாரங்கள், இன்று பிறந்தநாள் கண்ட ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் வெளியிட்ட சிவபெருமான் விளம்பரத்தை ரஜினி கண்டிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்று பாமர ரசிகர்கள் விளங்கும்வரை, இவர்போன்ற சூப்பர் ஸ்டார்கள் தமிழனை அரசியலிலும் வாழ்க்கையிலும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள். இது தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!.
இப்படிக்கு,
முன்னாள் ரஜினி ரசிகன்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கு.
திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.
Rajini is not a Tamilian.
He is acting Drama.
He is cheating Our TAMILIANS.
Be Aware TAMILA....
எத்தன வயசு கொழந்தைங்கிறதயும் சொல்லிப்புடுங்க சாமீய்
சரியாக சொன்னீர்கள் நதிமூலம்.
மாட்டோமே...
பஹ்ருத்தீன்
சும்மா கிச்சு கிச்சு மூட்டாதீங்க பஹ்ருதீன். கொஞ்சமாவது யோசிச்சா நடிக, நடிகைங்க கையிலெல்லாம் ஆட்சியக் கொடுப்போமா?
அப்ப, ஆந்திராக்காரன் பிறந்த நாளைக்கு துக்கம் விசாரிப்பானோ? ஏம்ல எதுக்கெடுத்தாலும் தமிழன் பண்பாடு அது இதுனு சொல்லிகிட்டு, போலே போயி முல்லைபெரியாறுக்காவது குரல் கொடுல புண்ணியமா போவும் உனக்கு
பஹ்ருத்தீன்
வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கு.
திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.
ஒலகநாயகனினின் முன்னால் பொண்டாட்டி சரிகா ஒரு இந்திக்காரிதானே கம்ல் பிரியரே?
கமல் ரசிகனா இருந்தாத்தான் என்னாங்கிறேன்? உண்மைய யார் வாணாலும் போட்டு உடைக்கலாம்.
Tamils are the one never admit to rule by Tamils for example MGR Malayalam,Jayalalitha Karnataka,in line Vijaykanth Telugu .
Rajini is not a Tamilian.
He is acting Drama.
He is cheating Our TAMILIANS.
Be Aware TAMILA....
Read more about தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு! [1299] | வாசகர் கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com
சரியா சொன்னீங்க கணேஷ்
இதுபோன்ற தமிழின விரோதிகளை நாட்டைவிட்டு அடித்து விரட்டவேண்டும்.
சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே வாழ்க்கை அல்ல...
In my view rajini is a gentle Tamilan..
go good hospital for your mental treatment
How can you scold my Thalaivar.
If you dont like him dont watch his movie.
திரு.sadasivam அவர்களே, தங்களது அநாகரீக கருத்து நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
It is Already Done in the Name of Cast, Religion, Language, County, Continent & Etc...
Please Lets Join to Build United India.
We Are Indians....
கரெக்ட்
அப்படி தலையெழுத்துன்னு பேசாம இருக்கக்கூடாது. தலைவர் பால்தாக்கரேயின் வழியினை நாமும் பின்பற்றி, தமிழனல்லாத எல்லோரையும் தமிழகத்தைவிட்டு அடித்து விரட்ட வேண்டும்.
Mothathile Ippo Maanila, Mathasandaiku Asthivaaram Podureenga Ille? Ithaan Unga Kamal Solluraara Kamal Rasigare?
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed