பிரியத்தின் மென்விரல் மீது
படர்ந்திருக்கிறது
கோபமாய் பழுத்த
கொப்பளமொன்று!
செய்திக் கிருமியொன்று
செவியில் நுழைந்து
உறுத்தல் கொண்டு
உள்ளே குடைந்து..
செல்களை அரித்து
சிதைத்துச் சீழுற்று...
கோபமாய் பழுத்த
கொப்பளம் உனது!
வெயில் போல காய்கிறது
மெளனம்.
நேரடி சிகிச்சைக்கு
நீ தயாரில்லை எனினும்
காலத்தின் பச்சிலையிலோ
ஒரு களிம்புப் பேச்சிலோ
குணமாகக் கூடும்.
இன்றோ நாளையோ..
அறிந்தே வைத்திருக்கிறோம்
காலப் பெருவெளியில்
அணுவினணுவினணுவின்
அற்பத் துளிகள் நாமென்று!
- இப்னு ஹம்துன்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
பாராட்டுகளும் வாழ்த்துகளும் கவிஞருக்கு...
அணுவிணணுவிணணுவின்
கொஞ்சம் இதை எளிமையாகச் சொல்லி இருக்கலாம்... புரிஞ்சுக்குறதுக்குள்ள நம்ம அறிவு காது வழியா வழிய ஆரம்பிச்சுடுச்சு... :)))
என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்.
ஜாபர் அலி, ரியாத்.
PL PUBLISH ASA BOOK - E N PR BOOK
ஆஹா, அப்ப இது நவீன கவிதைதான்.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed