இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கவிதைகள் சச்சினைப் பார்த்து தோனி பாடும் பாடல்!

சச்சினைப் பார்த்து தோனி பாடும் பாடல்!

தோனி-சச்சின்அது 2008ன் இறுதி. இந்திய சுற்றுப்பயணம் வந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியிடம் மண்ணைக் கவ்வியபோது, ஆஸ்திரேலியாவைக் கலாய்த்து நண்பர் ஒருவர் ஒரு பாடல் எழுதியிருந்தார்.

மிக அருமையான பாடல் அது!

இப்போதோ, இந்திய அணியைக் கலாய்க்கும் நிலைமை.

ஊரத் தெரிஞ்சுகிட்டேன்...உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி.. என்ற மெட்டில் நமது கவிஞர்  இப்னு ஹம்துன் எழுதியிருக்கிறார்.

********

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி  சச்சினு... என் சச்சினு..!

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!


சச்சின் உண்டுன்னுதானே தாட்பூட்டு செஞ்சேன்

பிச்சி எடுக்கறான்யா புதுபயலும் அடிக்கறான்யா!

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!


போ...தும் இந்த ஆட்டம்,  போ...டு வேற ஆட்டம்
சூ.. து செஞ்ச தாரு?  சோர்ந்து போச்சு.. கூட்டம்

நம்பினேன்.. ரொம்ப  நம்பினேன்...

அது எல்லாம் வீண் தானோ?

பேசினேன் ரொம்ப பேசினேன் இப்ப நானும் வீண் தானோ?

என் பேச்சு 'கா'விட்டு  என்னோடு கோவப்பட்டு

முன்போல ஆடலையே சேவாக்கு... என் சேவாக்கு

உன்போல கம்பீரும் உதவாமப் போய்ட்டானே சச்சினு...என் சச்சினு

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி சச்சினு... என் சச்சினு..!

சச்சின் உண்டுன்னுதானே தாட்பூட்டு செஞ்சேன்
பிச்சி எடுக்கறான்யா புதுபயலும் அடிக்கறான்யா!


ரா...குல் சரியில்லை... ரா...ஜ்யம் நமக்கில்ல...
'தானே' ஆடு..ம் தோனி!  இனி புயலில் ஒரு ஆணி

பந்துகள் மட்டை பந்துகள் அது நானே இனி நானே
நொந்ததே மனம் நொந்ததே என் ஆட்டம் எல்லாம் வீணே

அவதூறு பேசுவாங்க அவமானம் தாங்கலையே
தவறாக போச்சுதடா லஷ்மணு என் லஷ்மணு

கடங்காரப் பசங்க இப்ப கால் வாரி விட்டாங்களே .. சச்சினு... என் சச்சினு..

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....!

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி  சச்சினு... என் சச்சினு..!

பேரு தொலஞ்சிடுச்சி...

பெரும கொலஞ்சிடுச்சி சச்சினு....என் சச்சினு....

ரேங்க்கும் எறங்கிடுச்சி...

ரோஷம் கொறஞ்சிடுச்சி  சச்சினு... என் சச்சினு..!

Comments  

 
+3 # ஜெனித் 2012-01-18 12:00
கவிங்கர் இப்னு ஹமுதனுக்கு அன்பான வேண்ண்டுகோல் மடை பந்து ஆடுபவர்களை பற்றி யோசித்து உங்கள் நேரத்தை வின்விரையம்
செய்யாதிர்கள் !
பதில் | Reply with quote | Quote
 
 
0 # வாசகன் 2012-01-19 17:44
Quoting ஜெனித்:
கவிங்கர் இப்னு ஹமுதனுக்கு அன்பான வேண்ண்டுகோல் மடை பந்து ஆடுபவர்களை பற்றி யோசித்து உங்கள் நேரத்தை வின்விரையம்
செய்யாதிர்கள் !


மடையர்கள் ஆடுவதும், மடையர்கள் பார்ப்பதும் தான் இந்த ஆட்டம் என்று பெர்னாட் ஷா சொன்னதற்காக 'மட்டைப் பந்தை' மடை பந்து என்று சொல்கிறீர்களா ஜெனித்?
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Magesh 2012-01-18 14:27
Sordid Truth, well written. Keep it up Hamdun Bhai. Magesh, Riyadh.
If Inneram can pass it on to Srikanth........will it be useful ?!
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Navas ahamed shahib 2012-01-18 18:47
fantastic concept. dreams make an artist
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Salim 2012-01-18 19:37
Don't waste ur time
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: