400 கிராம் போதைப்பொருட்களுடன் பிரபல நடிகை கைது!

மும்பை (05 ஜன 2021): 400 கிராம் போதைப்பொருளுடன் கன்னட நடிகை ஸ்வேதா குமாரிகைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹோட்டலில் வைத்து நடிகை ஸ்வேதா குமாரியை போதைப்பொருள் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பிறகு, திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு விவாதத்திற்கு வந்தது. நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கிலானி ஆகியோர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகை ஸ்வேதா குமாரி கைதாகியள்ளது…

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்.தாயார் மரணம்!

சென்னை (28 டிச 2020): பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா காலமானார். ரஹ்மானின் தாயார் காலமானதை ரஹ்மான் தாயின் புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ரஹ்மான் தாயார் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...

கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக…

மேலும்...

பிரபல இளம் நடிகைக்கு வணிக வளாகத்தில் வைத்து பாலியல் தொல்லை!

கொச்சி (18 டிச 2020): கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் மலையாள நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நடிகை தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அந்த நடிகை சமூக ஊடகங்களில் தகவலாக வெளியிட்டுள்ளார். அதேவேளை இதுகுறித்து நடிகை போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...

விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலையில் அடுத்த திருப்பம் – சிக்கும் தொகுப்பாளர் ரக்‌ஷன்!

சென்னை (15 டிச 2020): பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா -வின் தற்கொலை வழக்கில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை சித்ரா குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை ஒரு பிரபல…

மேலும்...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – கணவர் ஹேமந்த் கைது!

சென்னை (15 டிச 2020): விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் . சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவர் ஹேமந்தும் உடனிருந்தார். அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்தராவின் முகத்தில் இருந்த காயங்கள் அவரது…

மேலும்...

ஆவலோடு இருந்து ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள்!

சென்னை (12 டிச 2020): ரஜினி வீட்டின் வாசலில் காத்திருந்து ரஜினி வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிக்கு இன்று 70 வது பிறந்தநாள். ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. ரஜினிகாத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் ரஜினி…

மேலும்...

சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? போலீசார் பரபரப்பு தகவல்

சென்னை (10 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் . வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவரும் உடனிருந்தார். அவரை வெளியே…

மேலும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை!

சென்னை (09 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்….

மேலும்...