பீகாரில் ஆட்சியை பிடிக்கும் லாலுவின் மகன் – கருத்துக் கணிப்புகள் தகவல்!
பாட்னா (08 நவ 2020): பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் 243 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன….