பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதா?

புனே (25 செப் 2022): மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியினர் தேசிய புலனாய்வு தலைமையிலான பல அமைப்புகளின் பாரிய அடக்குமுறைக்கு எதிராக திரண்டிருந்தபோது, ​​’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ள ANI, அதிக சுற்றுப்புற இரைச்சல் காரணமாக ஸ்லோகங்களின் சில பகுதிகள் மங்கலாக இருந்ததாக தெரிவித்துள்ளது. கோஷம் எழுப்பப்பட்ட…

மேலும்...

ரிசார்ட்டில் பணிபுரியும் இளம் பெண் படுகொலை – பாஜக தலைவர் மகன் கைது!

ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்….

மேலும்...

பாஜகவுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் – லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டம்!

பாட்னா (22 செப் 2022): 2024-ம் ஆண்டுக்குள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி மாநில கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பீகார் பயணம் குறித்து சந்தேகம் தெரிவித்த லாலு, அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் “பாஜகவிடம் நான் பணிந்திருந்தால் இத்தனை நாள் சிறையில் இருந்திருக்க மாட்டேன். நான்…

மேலும்...

இந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக செய்த செலவு 344 கோடி!

புதுடெல்லி (22 செப் 2022) : இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்காக பாஜக ரூ.344.27 கோடி செலவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ரூ.218.26 கோடி செலவிட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவாகியுள்ளது. விர்ச்சுவல் பிரச்சாரத்திற்கு மட்டும் சுமார் 12 கோடி…

மேலும்...

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் என் ஐ ஏ சோதனை!

புதுடெல்லி (22 செப் 2022): : நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ- தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இரு நிறுவனங்களாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் உள்ள மாநிலக் குழு…

மேலும்...

முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது தவறு – உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (20 செப் 2022): கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதாம்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அத்தியாவசிய மதப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது என்று நீதிபதி துலியா தெரிவித்தார்….

மேலும்...

காங்கிரஸுக்கு காந்தி குடும்பம் இல்லாதவர் தலைவராகிறார்!

புதுடெல்லி (20 செப் 2022): 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் மற்றும் கேரள மாநிலம் எம்பி சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசோக் கலோட் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர். கட்சியில் சீர்திருத்தம் கோரிய கோஷ்டியின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸின் ஜி23 குழுவின்…

மேலும்...

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

போபால் (19 செப் 2022): மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்றபோது, வருங்கால கணவர் முன் சிறுமி இரண்டு மைனர்கள் உட்பட 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், இரு குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இரு குடும்பத்தாரும் புகார் அளிக்க விரும்பவில்லை. இந்த…

மேலும்...

மாணவிகள் விடுதி பாத்ரூம் வீடியோ லீக் – மாணவிகள் தற்கொலை முயற்சி!

சண்டிகர் (18 செப் 2022): பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததையடுத்து, பல்கலைக் கழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட சக மாணவியை கைது செய்தனர். இதற்கிடைய வீடியோவில் உள்ள சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்று மொஹாலி…

மேலும்...