புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய “தி துபாய் மால்” அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் தற்போதைய பெயர் “தி துபாய் மால்” பெயரில் இதுவரை “தி துபாய் மால்” என்று அழைக்கப்பட்டு வந்த இது இனி வெறும் ‘துபாய் மால்’ என்று மட்டும் அழைக்கப்படும். துபாய் மால் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பெயரை…

மேலும்...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி அரேபியாவில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சவூதி குடிமக்களைப் பணியமர்த்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நிதாகத் (Nitaqat) என்பது சிவப்பு, வெளிர் பச்சை, நடுத்தர பச்சை, அடர் பச்சை மற்றும் பிளாட்டினம் போன்ற வெவ்வேறு வண்ணங்களில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப…

மேலும்...

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், “நில அதிர்வு எதுவும் ஏற்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களையும் ஆய்வு செய்தனர். எதிலும் நில அதிர்வு அல்லது பூகம்பம் குறித்து தகவல் இல்லை. மிகுந்த குழப்பத்துக்கிடையே ‘TimeOut Dubai’ என்ற இணையதளம் அது பூகம்பம் அல்ல என்பதை உறுதி செய்தது. மேலும் துபாய்…

மேலும்...

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 16 பேர் பலி!

அலெப்போ (23 ஜன 2023): சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஓரு குழந்தை உள்பட 16 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை!

அபுதாபி (23 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா விவகாரங்களில் இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக ஆன்லைன் மூலம், ஸ்மார்ட் விசா மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் செய்யலாம். மேலும் பிழைகளை திருத்தலாம். விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி தகவலை மாற்ற ஐந்து படிகள் முடிக்கப்பட வேண்டும். அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளம் அல்லது www.icp.gov.ae இல் உள்ள UAE ICP ஸ்மார்ட் ஆப்…

மேலும்...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும். குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும். மக்காவில்,…

மேலும்...

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

துபாய் (22 ஜன 2023): துபாயில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. IWF பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில்,IWF அமீரக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம், IWF அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் IWF அமீரக துணைச்செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது… இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக HASHEMITE Group…

மேலும்...

ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…

மேலும்...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும்…

மேலும்...