waives Rs 1.52 crore bill

மருத்துவக் கட்டணம் 1.52 கோடி! தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

துபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான கட்டட தொழிலாளி ஒட்னாலா ராஜேஷ் என்பவருடைய சிகிச்சைக் கட்டணம், 1.52 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது துபை-இன் மருத்துவமனை ஒன்று! வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இந்திய துணை தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டி,…

மேலும்...

வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (06 ஜூலை 2020):காற்றிலும் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கையில், தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள்…

மேலும்...

அமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு!

நியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா என்கிறது நியூயார்க் டைம்ஸ். என்ன நடந்தது? நியூயார்க் டைம்ஸ் தரும் தகவல்களின்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஓர் ஊழியரை இரண்டு மேலதிகாரிகள் தொடர்ந்து சாதிய பாகுபாட்டுடன் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் சாதியம் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதனால்…

மேலும்...

இனி, 2036 வரை நான்தான்” – புதின்

மாஸ்கோ (02 ஜூலை 2020): ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்திருப்பதற்கு மக்கள் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரஷ்ய உளவு அமைப்பு கேஜிபியின் முன்னாள் உளவாளியாக இருந்த புதின் செயல் அதிபராக பதவியேற்றார். அதன் பின் 2008 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2014…

மேலும்...

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

இஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது இந்த விமானிகளில் பலர் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்ற அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டடது. இதனையடுத்து வியட்னாம் அரசு பாகிஸ்தான் விமானிகளுக்கு தடை விதித்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், பாகிஸ்தான் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது. 1.7.2020 தொடங்கியுள்ள இந்த…

மேலும்...

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்!

இஸ்லாமாபாத் (29 ஜூன் 2020): பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் முதல் இந்துக் கோவில் கட்டுமானப் பணிகள் 23.06.2020 அன்று தொடங்கியது. அங்குள்ள சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் நிறுவுவதை இம்ரான்கான் அரசு நிறைவேற்றி உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் வளாகம் என பெயரிடப்பட்டுள்ள வளாகத்தில் ஒரு இடுகாடு, பார்வையாளர்கள் தங்குமிடம்,சமூகக் கூடம் மற்றும் வாகன நிறுத்தகமும் சுமார் 22 ஆயிரம் சதுர அடியில் H-9 பிரிவில் அமைய உள்ளது. இந்த நிலம் 2017இல் முன்னாள்…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு!

வாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன.இது பல இனம் மதம் மொழி…

மேலும்...

கூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி!

நியூயார்க் (23 ஜூன் 2020): வெளிநாடுகளிலிருந்து அமெரிக்‍கா வந்து பணிபுரிய அனுமதி வழங்கும் அனைத்து வகையான விசாக்‍களும் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த உத்தரவு நாளைமுதல் அமலுக்‍கு வருகிறது. கொரோனா நெருக்‍கடியால், அமெரிக்‍காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளை சரிசெய்து, உள்நாட்டினருக்‍கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்‍கும் என அவர்…

மேலும்...

ட்ரம்பின் முகத்திரையை கிழிக்கும் புத்தகம் – அமெரிக்க அரசு அவசர தடை!

வாஷிங்டன் (22 ஜூன் 2020): வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டன் The Room Where it Happened” எனும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி இந்த புத்தகம் வெளியாக இருந்த நிலையில் நேற்று அந்த புத்தகத்திற்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்தது. அரசின் முக்கிய பதவியில் இருந்தவர் எழுதிய புத்தகம் என்பதால் அதனை தணிக்கை செய்த பின்னரே வெளியிட முடியுமென காரணமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு தேர்தலில்…

மேலும்...

மூன்று மாதங்கள் மின்சார சலுகை – அரசு அதிரடி உத்தரவு!

கோலாலம்பூர் (21 ஜூன் 2020): மலேசியாவில் உள்நாட்டு பயனர்களின் மின்சார கட்டணங்களுக்கான கூடுதல் 942 மில்லியன் ரிங்கிட் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மலேசிய அரசின் பொருளாதார ஊக்க திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட மின்சார கட்டணங்களில், இந்த உத்தரவு உதவியாக இருக்கும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார். ஏற்கனவே மின் கட்டன உயர்வு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இந்த உதவி திட்டத்தின் கீழ் RM77…

மேலும்...