பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்தது!

இஸ்லாமாபாத் (30 மார்ச் 2022): இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ம்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அபராதம்!

இஸ்லாமாபாத் (24 மார்ச் 2022): தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு விதிகளை மீறியதாக இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் படி அரசுப்பணிகள் மேற்கொள்பவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைப் பார்வையிடக் கூடாது. ஆனால் இம்ரான்கான் அந்த விதிமுறையை மீறி பாகிஸ்தானின் கைபர் – பக்துன்கவா மாகாண மலக்கண்ட் அருகே ஸ்வாட் பகுதியில்…

மேலும்...

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

டோக்கியோ (17 மார்ச் 2022): ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் புதன்கிழமை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 7.3 ரிக்டர் அளவிலான நடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு வலிமையாக குலுங்கியது. இதன் தாக்கம் வியாழன் காலையும் இருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரம்…

மேலும்...

உக்ரைன் மீதான போர் ஒரு குற்றச்செயல் – ரஷ்ய விமானி!

மாஸ்கோ (14 மார்ச் 2022): ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், விமான பயணத்தின்போது “உக்ரைன் மீதான போர் குற்றச்செயல்” என்று பயணிகளிடம் விமானி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை கண்டிக்கும் விமான ஒரு ரஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை உடனடியாக நிறுத்துமாறு விமானி அழைப்பு விடுப்பதாக வீடியோவில் உள்ளது. ‘: “உக்ரைனில் நடப்பது போர் ஒரு குற்றம். விவேகமுள்ள குடிமக்கள் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான்…

மேலும்...

இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கராச்சி (09 மார்ச் 2022): 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்ற IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி என கருதப்படும் மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் , மார்ச் 1 அன்று கராச்சியின் அக்தர் காலனியில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம், 179 பயணிகள் மற்றும்…

மேலும்...

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் அறிவிப்பு!

மாஸ்கோ (05 மார்ச் 2022): உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று காலை 11;30 மணி முதல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் துறைமுக நகரமான மரியுபோல் உட்பட மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்கள் வெளியேற உதவும் வகையில் இந்த போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அதேவேளை இந்த போர்…

மேலும்...

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்!

சைடோமிர் (02 மார்ச் 2022): உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி யாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை…

மேலும்...

உக்ரைன், ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ (02 மார்ச் 2022): ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இரு தரப்பிற்கும் இடையே…

மேலும்...

உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமா?

மாஸ்கோ(28 பிப் 2022): அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர்…

மேலும்...

ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஒப்புக்கொண்ட ரஷ்யா!

மாஸ்கோ (28 பிப் 2022): உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா…

மேலும்...