ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!

Share this News:

மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார்.  கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் அமீரின் தாயார் பாத்து முத்து (வயது 85) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மெக்கா சென்றிருக்கும் அமீர் இன்று மதுரை திரும்புகிறார்.

முன்னதாக ஹஜ் கிரியைகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அவசரமாக ஊர் வருகிறார்.

அவரின் தாயார் இறுதி சடங்கு நாளை காலை 10 மணி அளவில் மதுரை நெல் பேட்டை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறுகிறது.


Share this News:

Leave a Reply