நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – வீட்டிலே இருப்பதே துரை சிங்கம்தான் – நெட்டிசன்கள் கருத்து!

Share this News:

சென்னை (17 நவ 2021): நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது.

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர், ஆற்காடு தெருவிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் அங்கு இருப்பதே துரை சிங்கம்தான் என்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply