அது உண்மைதான் – நடிகர் சுஷாந்த் தற்கொலை: உண்மையை போட்டுடைத்த நடிகை!

Share this News:

மும்பை (23 ஜூன் 2020): தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்ததையும் பின்பு இருவரும் பிரிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ரியா.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில் மும்பை போலீசார் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் காதலித்தது உண்மை தான் என்றும், நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ரியா ஒப்புக்கொண்டார். அதேவேளை இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்ததாகவும் ரியா தெரிவித்துள்ளார்..

மேலும் போலீசார் அவரது மொபைல் போனை சோதனை செய்ததில் இருவரும் பரிமாறிக்கொண்ட வீடியோக்கள், சாட்கள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ரியா உட்பட சுமார் 13 பேரிடம் போலீசார் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் ஒரு சிலரிடம் விசாரணை நடத்திட அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பீஹார் நீதிமன்றத்தில் நடிகை ரியா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பீஹார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த குந்தர் குமார் என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேரின் மீது பீஹார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: