நடிகை தீபா வெங்கட் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

Share this News:

சென்னை (02 ஜூன் 20021): பிரபல நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்டுமான தீபா வெங்கட் குறித்து வெளியான வதந்தியால் அவரது ரசிகர்கள் பரபரப்பு அடைந்தனர்.

45 வயதாகும் தீபா வெங்கட் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு நிம்மதியாக இப்போது வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில்தான் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக அவருக்கு விபரீதம் நடந்துவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரப்பி விடப்பட்டது.

இதனால் பதறிப்போன அவரது தாய் பத்மா வெங்கட், எனது மகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் வீட்டில் நல்லா இருக்கிறார்.. அவர்தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார். யாரோ வதந்தி பரப்பி விட்டார்கள், தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள் என்று தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.


Share this News:

Leave a Reply