மே 2012
வியாழன், 24 மே 2012 18:03
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை வெளியிட்ட முரசொலி பத்திரிகை மீது முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 17:44
செய்திகள்
/ மத்திய கிழக்கு செய்திகள்
|
|
இந்தியாவில் வரதட்சணை வழங்க வழியின்றி, கல்யாணச் சந்தையில் செலாவணி ஆகாமல் வாடும் குமரிகள் ஏராளம் எனில், அரபு நாடுகளில் அப்படியே நேரெதிர்.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 16:53
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தன்னுடன் படித்து வந்த 16 வயதேயான சக மாணவியை இழுத்துக் கொண்டு ஓடி திருமணம் செய்த 14 வயது மாணவனை காவல்துறை பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 16:51
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
புதுக்கோட்டை - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் போட்டியிடுவதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 16:44
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
அமெரிக்க சிஐஏவுக்கு அல்காய்தா பின்லேடனின் இருப்பிடத்தைக் காண்பித்துத் தந்த மருத்துவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளதை அமெரிக்க எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 16:17
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை உயர் நீதிமன்றம், மத்திய (சென்ட்ரல்) தொடர் வண்டி நிலையம், குறளகம், இந்தியன் வங்கி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பியவரை காவல்துறை நெருங்கியுள்ளது.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 16:15
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
சென்னை - மின்சார பராமரிப்பு வேலைகள் காரணமாக 26.05.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more... []
|
|
வியாழன், 24 மே 2012 15:39
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
பாலியல் தொழில் நடத்தி வந்த தொலைக்காட்சி சீரியல் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 23:42
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ( 23.5.2012) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் அதிரடி ஆட்டத்தினால்,மும்பை இந்தியன்ஸ் அணியினை தோற்கடித்து, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 20:15
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா? ஆம் இப்படிதான் போட்டுள்ளனர் ஐ.பி.எல் இணைய தளத்தில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தோல்வியைத் தழுவ ஒரு வழியாக ஆடாம ஜெயித்தோம் என்ற பாணியில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 20:11
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
ஐ.பி.எல் லில் கறுப்புப் பணப் புழக்கம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை புனேவில் அமைந்துள்ள புனே வாரியர்ஸ் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 20:07
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப் பட வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்து இருந்தார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 18:25
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
இந்தியக் கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவருமான ஸ்ரீனிவாசன் தம்மையும் தமது நண்பரையும் துன்புறுத்துவதாகவும் தமது வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்தைப் பயன்படுத்தி ஸ்ரீனிவாசன் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்து இருப்பதாகவும் அவரது மகன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 18:21
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 18:14
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 15:56
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
மதுரை ஆட்சியராக பதவி வகித்து வந்த சகாயம் அந்த பணியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 15:51
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 15:37
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை - மின்சார வாரியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 15:30
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை - தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, ”திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை-1 மற்றும் டெங்கு வைரஸ் வகை-3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
புதன், 23 மே 2012 11:45
விமர்சனம்
/ செய்தி விமர்சனம்
|
5 வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஐ.பி.எல். கறுப்புப் பணம்,சூதாட்டம், பாலியல் புகார், போதை பார்ட்டி என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 23:50
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை - கழகத்திற்கு துரோகம் புரிந்தவர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம். நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய “கல்லணை” போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது” என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய முழு அறிக்கை வருமாறு - ’’உள்ளன்போடு என்னை நேசிக்கும் பேராசிரியப் பெருந்தகை எனக்கு வாழ்த்துக் கட்டுரை எழுதி ஆங்காங்கு நீயும், ஏனைய உடன்பிறப்புகளும் அந்நாளை அகமும் முகமும் மலர்ந்திட நீயும், நின் குடும்பத்தினரும் குதூகலத்துடன் கொள்கை நெறி குன்றாமல் கொண்டாட வேண்டுமென்று, குற்றால அருவியென தமிழைக் கொட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணாவுக்குப் பிறகு எனக்கு வாய்த்த அண்ணனாக; அவர் இருப்பதை எண்ணியெண்ணி என் பணியில் மேலும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு அவரது வாழ்த்துக் கட்டுரை எத்துணை இன்பத்தை பொழிந்திடக் கூடியது என்பதை எங்கள் இருவரையும் எழுபதாண்டு காலத்திற்கு மேலாக அறிந்துள்ள திராவிடச் செல்வங்களாம் உனக்கும், உன் போன்றார்க்கும் நான் விளக்கி எழுதத் தேவையில்லை. அவரைப் பெரிதும் மதிக்கும் நான் யார் என்பதையும் - அன்பைப் பொழிந்து என்னை வாழ்த்திடும் அவர் யார் என்பதையும் இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தே இருக்கிறோம்.
பெரியார் பாசறையின் மாணவர்களாக - அண்ணாவின் பாடி வீட்டுத் தோழர்களாக - அவரும், நானும் புகழோடு தோன்றிய அந்தக் காலந்தொட்டு - இன்று சூரியனுக்கு ஆதரவு திரட்டி சுயமரியாதை உணர்வின் சூடு தணியாமல் திராவிடத் தமிழர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறிட அமைந்த பாசறையாம் தி.மு.கழகத்தில்; அதற்கு நீர் பாய்ச்சி வேர் வளர்த்து விழுதுகளும், கிளைகளும் தழைத்தோங்கும் தருணத்தில், அதனைப் பாதுகாக்கும் வேலியின் காவலர்கள் பலர் இருந்தும்; அந்தக் காவலர்கள் வரிசையில் தலைமைக் காவலர்களாக நானும், அவரும் நெடிதுநாள் உழைத்து; அவர் 90வது அகவையையும், நான் 89வது அகவையையும் அடைந்திருக்கிறோம் என்றால்; நாங்கள் இந்த வாழ்க்கையில் இன்பத்தை துய்த்தோம் இல்லை; இல்லற சுகத்தைப் பெரிதென எண்ணிக் கிடந்தோமில்லை.
சோதனை, வேதனை என்று சுழன்றோடும் வாழ்க்கையில் இயற்கை இழுத்துச் செல்லும் திசையில் சென்றும் - லட்சிய வெற்றி யடைந்திட வேண்டும் என்ற உறுதி ஒன்றையே உயிராகக்கொண்டு; உழைத்து, களைத்து - இன்றைக்கு உன் போன்றோர் ஊட்டும் உற்சாகத்தால்; கை வண்டியில் நகர்ந்தும் - கம்பு ஊன்றி நடந்தும் - கண்மணி என நாம் போற்றும் கொள்கைகளைக் காத்திடத்தான் இந்த வயதிலும் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குத் துணையாக தளபதிகளும்; தளகர்த்தர்களும்; தானாடாவிடினும் தன் தசை யாடும் என்ற உறவும் உணர்வும் ஒரு சிறிதும் அகலாத “உடன்பிறப்புக்களே” என எப்போது நான் உச்சரிப்பேன் எனத் தவம் கிடக்கும் தன்மானத் தமிழின திராவிடர் பட்டாளமும் - எண்ணிக்கையில் ஐம்பது லட்சம் பேரை நெருங்குகிற வண்ணம், ஒரு பெரும் கடலாக காட்சி தரும் இந்தக் கழகக் கோட்டையில் தொடர்ந்து 43 ஆண்டுகளுக்கு மேலாக காவல் பணி புரிகிறேன்.அதற்காக நீ எனக்கு நடத்தவிருக்கும் பிறந்த நாள் விழாவினை நன்றி தெரிவிக்கும் விழாவாக நான் நினைப்பேனே தவிர,எனக்குப் பொருத்த மான விழா ஒன்றை, தேவையான விழா ஒன்றை, பேராசிரியரும், நீயும், உன் போன்றோரும் எடுத்தீர்கள் என எண்ணி நான் என்னை ஏமாற்றிக் கொள்பவனல்ல என்பதை நீ அறிவாய் அல்லவா?
இன்னும் பெருந்தொண்டு; பெரியார் வழி நடக்கும் தொண்டு. பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித் தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்து தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும். ஒற்றுமை உரமாகட்டும். என்றுரைக்கின்றேன்.
தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம். நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய “கல்லணை” போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது. இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் நமது அமைப்புக்களில் ஏற்படும் கீறல்களையும், பிளவுகளையும் போக்குவதற்கு வழி காண நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழகத்தின் தளகர்த்தர்களும் அமர்ந்து பேசி மாவட்டந்தோறும் கழகத்தில் கட்டிக் காக்கப் படும் ஒற்றுமை, சுட்டிக்காட்டப்படும் வேற்றுமை இவற்றையெல்லாம் கணக்கிட்டு - இவற்றுக் கோர் இறுதி முடிவு காணக் குழு ஒன்றினை; தலைமைக் கழகச் சார்பில் நியமித்தோம்.
அந்தக் குழுவினர் நாம் குறிப்பிட்ட இடங் களுக்குச் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து, ஒரு தரப்பு புகார்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரு தரப்பு நியாயங்களையும் எடுத்து விளக்கிடும் அறிக்கை ஒன்றை தலைமைக்கு தந்துள்ளார்கள்.அந்த அறிக்கைத் தொகுப்பைக் காணும் நேரத்தில் அண்ணா பெயரால் ளியிடப்பட்டிருந்த நூல் ஒன்று எனக்குக் கிட்டியது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று மதுரை மாநில மாநாட்டையொட்டி, அண்ணா எழுதிய அருமையான எழுத்தோவியம் அது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று அண்ணா சொல்லிய அந்த வாசகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு குழுவினர் கொண்டு வந்து தந்த அறிக்கைத் தொகுப்பை நானும் பேராசிரியரும் பார்வையிட்டோம்.
கட்டுப்பாடு மீறியோர் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தோரும்; அவர்களின் பெயர்கள் அறிக்கையிலே இடம் பெற்றிருப்பதை அறிந்து, தெரிந்து, தாம் இழைத்தது குற்றம்தான் எனத் தெளிந்து என்னையும், பேராசிரியரையும் மற்றும் தலைமைக்கழகத்தினரையும் தொடர்பு கொண்டு “பிழை பொறுத்தருள்க” என்றும் கேட்கிறார்கள். “இனி பிழை நேராது” என்ற உறுதியும் அளிக்கிறார்கள். பிழை புரிந்தோர் யாரென்ற பட்டியலையும் பார்க்கின்றோம். இனி அப்பிழை நேராது என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு தொடர்ந்து நமது கொடியின் கீழ் நின்று தொண்டு புரிய துடிப்பவர்களையும் காணுகின்றோம். இவர்களில் யார் பிழை புரிந்தோர் - யார் மீது வீண் பழி என்பதை ஆராய்ந்து அளவிட்டுத் தீர்ப்புச் சொல்ல நிலைமையும் இடம் தராது; நேரமும் போதாது.
லட்சக்கணக்கில் உறுப்பினராவது இருப்போரில் புகார்களுக்கு ஆட்பட்டோர் தொகை; அப்படி ஒன்றும் அளவிடற்கரியதல்ல. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளது தான். கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன பெரியாரின் நிழலில் வளர்ந்த நாம் “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணா வின் பொன்மொழியையும் தள்ளி விடுவதற்கில்லை.புகாருக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை என்கிறபோது அந்தப் புகார்களைக் கொடுத்தவர்கள் மீதும் புகார் இருப்பதை நாங்கள் அறியாமல் இல்லை. இதற்குத் தீர்வு என்ன? “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நமக்குத் தற்காலிகத் தீர்வு. அப்படியென்றால் கழகத்திற்குத் துரோகம் புரிந்தோர், கழகத்தின் வெற்றிக்கு முட்டுக் கட்டையிட்டோர் - தலைமைக் கழகத்தின் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்களா எனக் கேட்கலாம். தண்டனையைவிட மேலான கண்டனத்திற்கு உள்ளாவார்கள் என்பதும், எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என்பதும் நான் அளிக்கும் உறுதியான வாக்குறுதியென தம்பிமார்கள் நம்பிடுவார்களாக.
தவறிழைத்தோரைப் புரிந்து கொண்டோம் என்பதும்; கழகத்திற்குத் துரோகம் இழைத்தோர் திருந்தக் கூடும் என்ற நம்பிக்கையும் தான் - இதற்கு மேலும் இந்த இனமான இயக்கத்திற்கு எள்ளளவு இழிவு தேடிட எண்ணுவோர் எவராயினும் “மறப்போம் மன்னிப்போம்” என்றில்லாமல், கழகத்தை இழிமொழிக்கு உள்ளாக்காமல், இறுதிவரை கட்டுப்பாடு காப்போம் என்ற உறுதியை எனது பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நானும் பெறுகிறேன். நீங்களும் பெற்றிடுவீர்.
நமது படைக்கலனாம் இனமானக் கொள்கையையும் - பாசறைகளாம் கழக அமைப்புக்களையும் - திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் மேலும் வலுப்படுத்திடவும் - இங்கே தமிழகத்தில் தன்மான உணர்வு பெருகிடவும் - ஈழத்தில் தனித் தமிழ்நாடு உருவாகிடவும் - “வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்; வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்” என்ற புரட்சிக் கவிஞரின் புயல் வரிகளுக்குப் பொருள் புரிந்து போர் முரசம் ஆர்த்திடவும் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சூளுரை ஏற்பதே இந்தச் சுய மரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்தாகும்’’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 23:43
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
நியுயார்க் - அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோரும் தைரியம் வேண்டும் என பிலாவல் சர்தாரி தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 23:20
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இன்று புனேயில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணியினை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் காம்பீரும்,மெக்கல்லமும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
16 பந்துகளில் 32 ரன்கள் குவித்த காம்பீர் ரன் அவுட் ஆன பிறகு கொல்கத்தாவின் ரன் ரேட் விகிதம் குறைந்தது. அந்த அணியின் மெக்கல்லம் 31 ரன்களும், காலிஸ் 30ரன்களும் எடுத்தனர். ஸாகிப் அல் ஹஸன் 1 ரன்னில் அவுட் ஆகவும் 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த யூசுப் பதானும், லக்ஷமி சுக்லாவும் கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 162 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 40 ரன்கள் குவித்தார்.சுக்லா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னரும் ( 7 ரன்கள்), சேவாக்கும் (10 ரன்கள்) விரைவில் பவுலியன் திரும்பினர். பின்னர் ஓஜாவும்,ஜெயவர்த்தனேவும் சிறப்பாக ஆடினர். ஜெயவர்த்தனே, இக்பால் அப்துல்லாவின் பந்து வீச்சில் 40 ரன்களில் அவுட் ஆகியதும், டில்லி அணியின் மற்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் நாரின் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
தோல்வியுற்ற டில்லி அணி, நாளை சென்னை மற்றும் மும்பைக்கு இடையில் நடைபெறும் போட்டியில் வெல்பவர்களுடன் மீண்டும் மோத உள்ளது. அந்தப் போட்டியில் வெல்பவர்கள் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்க உள்ளனர்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 21:28
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப் பட்ட நித்யானந்தா திருவையாறில் உள்ள ஆதீன மடத்துக்கு சென்ற நிலையில் நித்யானந்தா திருவையாறுக்குள் நுழையக் கூடாது என பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்ட திரண்டு இருந்தனர்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 21:04
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களைவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை தங்கள் கட்சி ஆதரிப்பதாக அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் தெரிவித்துள்ளன.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 21:00
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் இன்று காலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 20:22
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று இரவு பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் 2G ஊழல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராசா பங்கேற்பார் என்று தெரிகிறது.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 18:11
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
தமிழகம் முழுவதும் +2 தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப் பட்டன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள பேரறிவாளன் 1096 மதிப்பெண்களும் ,முருகன் 983 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 13:30
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 11:32
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி காலை 11 மணிக்கு வெளியிட்டார்.நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி சுஷ்மிதா முதல் இடத்தை பெற்றுள்ளார்
மாணவி சுஷ்மிதா 1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இயற்பியல்,வேதியியல்,உயிரியியல் மற்றும் கணிதப் பாடங்களில் இவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சுஷ்மிதா நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி ஆவார்.
இரண்டாம் இடத்தினை கார்த்திகா,அசோக்குமார் மற்றும் மணிகண்டன் பிடித்துள்ளனர். இவர்கள் 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மூவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது.
1187 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். திருச்செங்கோடு மாணவி பிரபாசங்கரியும், நாமக்கல்லைச் சார்ந்த மகேஸவரியும் மூன்றாம் இடத்தை பெற்றவர்கள். கணிதத்தில் 2656 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழில் விழுப்புரம் ஏ.கே.டி.மாணவர் முத்துக்குமரன் 198 மதிப்பெண் பெற்று முதலிடத்தை, கோபி வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி கிருத்திகாவுடள் பகிர்ந்துள்ளார்.இயற்பியலில் 142 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். கடந்த வருடம் இந்த பாடத்தில் 646 பேர் 200க்கு 200 பெற்றிருந்தனர். இயற்பியல் பாடம் இந்த வருடம் மிகவும் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் குறிப்பி்ட்டிருந்தனர். குமரி மாவட்டம் குழித்துறை மாணவர் மிதுன் ஆனந்த் தாவரவியிலில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் நெல்லை மாணவர் ஸ்டெபிகிரண்பாண்டியன் 196 மதிப்பெண்கள் பெற்று முதலிடடம் பெற்றுள்ளார்.வரலாற்றில் சென்னை மாணவர் திலீப் முதலிடம் பெற்றுள்ளார்.
தேர்வு எழுதிய 756,464 மாணவ மாணவிகளில் 655,594 ( 86.7)பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 89.7 சதவிகிதத்தினரும், மாணவர்களில் 83.2 சதவிகிதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 11:28
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 10:04
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சட்டத்துக்கு புறம்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையென்றால் இலங்கைத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
Read more... []
|
|
செவ்வாய், 22 மே 2012 00:42
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|

மும்பை : மும்பையில் ஓக்வுட் ப்ரிமியர் ஓட்டலில் நேற்று நள்ளிரவு நடந்த பார்ட்டியில் போதை மருந்து வைத்திருந்ததாக கூறி பெண்கள் உள்ளிட்ட 94 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 23:59
செய்திகள்
/ உலக செய்திகள்
|
தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஏமன் ராணுவத்தினர் ஏறத்தாழ ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 23:59
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
மும்பையில் நடைபெற்ற தாக்குதல் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் இனிமேல் சிறையில் சைவ உணவுதான் சாப்பிட வேண்டும்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 23:53
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புடைய கோவில் அடையாளம் தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டுள்ளது.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 23:44
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சென்னை - தமிழகத்துக்கு உரிமையான பென்னி குயிக் அணையினை உடைப்பதற்கு கேரள அரசாங்கம் சதித்திட்டம் தீட்டி வருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 23:14
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
துபாய் - தென் இந்திய திரைப்பட விழா முதல் முறையாக வெளிநாட்டில் நடைபெற உள்ளது.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 22:47
வணிகம்
/ வணிக செய்திகள்
|
|
அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தாலும் இறக்குமதி அதிகரித்துள்ளதாலும் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்து வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 19:12
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
திமுக ஆட்சி கடன் வாங்கி தமிழக அரசை நிதிக் சுமையில் தள்ளி விட்டதாகத் திரும்பத் திரும்ப குற்றச்சாட்டி வரும் அதிமுக அரசு, திமுக அரசு வாங்கிய கடனில் எத்தனை கோடியைத் திருப்பிச் செலுத்தியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 19:01
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
ஹோட்டலில் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று அமெரிக்கப் பெண் ஒருவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மீது குற்றச்சாட்டி இருந்தார்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 17:46
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டதை அடுத்து நில அபகரிப்புப் புகாரில் நடராஜன் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். எனினும் நடராஜன் மீதான பல வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நடராஜன் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 17:35
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
மும்பையில் ஜூகு கடற்கரையில் அருகேயுள்ள ஜெ.ஆர் மத்ரே ரோட்டில் அமைந்து இருக்கும் ஒக்வுட் பிரிமியர் ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் அரைகுறை ஆடையுடன் போதை பார்ட்டியில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை ஒக்வுட் ஹோட்டலுக்குச் சென்று போதை பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகைகள்,வெளிநாட்டினர் என 58 ஆண்களையும் 38 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 11:22
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. டெல்லியில் உள்ள அவரது சமாதியின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் ஆகியோர் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 11:07
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
குடியரசுத் தலைவர் பதவிக்கு மக்களவை சபாநாயகர் மீரா குமார், மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் தான் எங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 10:46
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞான தேசிகன் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 10:33
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
பெங்களூரு : பாஜகவின் மத்திய தலைவர்களை சில நாட்களாக தாக்கி பேசி வரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரைப்பாவை அவரின் நிலைமையில் தான் இருந்தால் விஷம் குடித்து செத்திருப்பேன் என்று எடியூரைப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார் பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா.
Read more... []
|
|
திங்கள், 21 மே 2012 02:49
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
கிரிக்கெட்டும் சூதாட்டமும் இணைபிரியா காதலர்களாகிவிட்ட இக்காலத்தில் சூதாட்டத்திற்கென விபச்சாரப் பெண்களைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக சூதாட்டத் தரகர்களிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளைக் கோரியதாக இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளேடு கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 23:39
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
காஷ்மீரில் ஹுரியத் கட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற கோஷ்டி மோதலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 23:34
செய்திகள்
/ உலக செய்திகள்
|
|
இத்தாலியில் உள்ள பலோக்னா மற்றும் மிலன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 23:02
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெக்கான் சார்ஜர் அணி. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற பரபரப்பான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆட்டத்தை விட்டு வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 22:55
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
ஜூலையில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தருமாறு பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 18:59
இந்நேரம் ஸ்பெஷல்
/ வணங்காமுடி பதில்கள்
|
|

மக்களின் எண்ணங்கள் நாட்டின் கொள்கை திட்டங்களாக மாற்றப்படுமா?? - அன்பு,திருச்சி
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 17:17
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
மதுரை ஆதீனம் பதவிக்கு நித்யானந்தா தகுதியானவர் தான் என்றும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூறும் தகுதி இல்லை என்று அகில பாரத அனுமன் சேனா நிறுவனத் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 17:17
செய்திகள்
/ மத்திய கிழக்கு செய்திகள்
|
|
சவூதித் தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 16:57
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
|
நடைபெற்று வரும் ஐ.பி.எல் 5 வது சீசனின் இறுதிப் போட்டி மே 27 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சகா அஷ்ரப்புக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 16:00
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெருமளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும் அதைத் தடுக்க ஐ.பி.எல் போட்டிகள் முற்றாக தடுத்து நிறுத்தப் பட வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 15:38
இந்நேரம்
/ தலையங்கம்
|
|
தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம் என்றெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்தும், "சாதி இரண்டொழிய வேறில்லை", "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று அவ்வையாரும் பாரதியும் பாடிய பாடல்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே, சாதி வாரியான கணக்கெடுப்புக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 15:30
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
புத்தரின் புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது உலகெங்கும் வாழும் தமிழர்களைப் புண்படுத்தும் செயல் என்றும் புத்தரின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத மகிந்த ராஜபக்சே அரசுக்கு புத்தரின் பொருட்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 15:07
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
அமெரிக்கா செல்ல இரண்டாவது முறையாகவும் விசா மறுக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தகவல் தொழில் நுட்பம் உதவியால் அங்கு பேச உள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 14:49
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
புதுக்கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் ஜாகீர் உசேன் தனக்கு ரூ 7.80 லட்சத்துக்கு அசையும் சொத்துக்களும் ரூ 15 லட்சத்துக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக தம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 11:15
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
கர்நாடக அரசு தமிழகத்துக்கு மாதாமாதம் தர வேண்டிய நீரை திறந்து விடாமல் இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 10:36
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 02:43
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
ஹைதராபாத் பெண் ஒருவரை இங்கிலாந்துக்குக் கடத்திச் சென்ற இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் நால்வரை ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறை கைது செய்துள்ளது.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 02:23
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
நடிகையுடன் உறவு, ஆதினப் பதவி பெற கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது ஆகியவற்றால் சர்ச்சையில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவின் பீடங்களில் ரகசிய காவல் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Read more... []
|
|
ஞாயிறு, 20 மே 2012 02:08
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சவூதி அரேபியாவுக்கு பணிநிமித்தம் பயணமாக இருந்த பெண்ணின் கடவுச்சீட்டு தொடர்வண்டி நிலையத்தில் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 23:34
செய்திகள்
/ இலங்கை செய்திகள்
|
|
வடகிழக்கில் உள்ள படை முகாம்களை அகற்ற முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெளிவுபடுத்தியுள்ளார்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 22:05
செய்திகள்
/ உலக செய்திகள்
|
இத்தாலி நாட்டில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில், இரண்டு மாணவிகள் பலியாகி உள்ளனர்.பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 18:35
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
மும்பையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற் குழுக் கூட்டம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 18:25
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|

ஹோட்டலில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் லியுக் சோமர்பேச் மீது அமெரிக்க பெண் சொஹைல் குற்றச்சாட்டி இருந்தார்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 18:12
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 16:27
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
|
சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ''எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி, நியாயமான விலையில், முறையாக மணல் கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்பனை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்து வந்ததுடன் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும் பணி முறைபடுத்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்து இருந்தது.
நான் மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவினையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுவரை 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உதாரணமாக, 12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்ட பள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார் ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப் பெற்றது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், கிராம உதவியாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல் 3.30 மணியளவில் அந்தக் கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து இருக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் கிராம உதவியாளர் திரு. ராஜேந்திரனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, கடுமையாக தாக்கி, அவரை இழுத்துச் சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளனர். மேலும், அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது, திரு. ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போது, அப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு. சேகர் என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். திரு. திருப்பதி மற்றும் திரு. கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 15:51
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
டெல்லியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 12:55
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
அதிமுக ஆதரவுடனேயே மதுரை ஆதீனமாக நியமிக்கப் பட்டேன் என மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 12:36
செய்திகள்
/ தமிழக செய்திகள்
|
திமுக ஆட்சியில் வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் வீட்டிலும் , மகன் மற்றும் மகளின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை சோதனை நடத்தினர்.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 12:13
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
பிரதீபா பாட்டில் வரும் ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தேடுக்கு முயற்சிகள் தொடங்கியுள்ளன.
காங்கிரசும் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவும் யார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பதை இன்னமும் அறிவிக்காத நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ சங்மாவுக்கு தங்கள் ஆதரவு என அதிமுகவும் ,பிஜூ ஜனதாதளமும் அறிவித்துள்ளன.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஆதரவு அளிக்க வேண்டும் '' என்று கேட்டுக் கொண்டுள்ளார்
Read more... []
|
|
சனி, 19 மே 2012 11:42
விளையாட்டு
/ கிரிக்கெட்
|
ஐ.பி.எல் 5 வது சீசன் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு விளையாடுவது உறுதி செய்யப் பட்டுள்ளது.
Read more... []
|
|
சனி, 19 மே 2012 11:16
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|
அரசு அளித்த சலுகைகளில் ஆர்வம் காட்டி கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இனிமேல் மருத்துவ மாணவர்கள் ஓர் ஆண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
Read more... []
|
|
வெள்ளி, 18 மே 2012 23:46
செய்திகள்
/ இந்திய செய்திகள்
|
|

கொசு கடித்து மரணம் நேரிட்டாலும் காப்பீடு திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நுகர்வோர் மன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
Read more... []
|
|
|