சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சார்ந்த கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் சேர உள்ள அனைத்து ஊனமுற்ற மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் எந்த கல்லூரியில் படித்தாலும் அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்துசேர உள்ள ஊனமுற்ற மாணவ&மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் அனைத்திலும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்துசேர உள்ள அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவ&மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது. இந்த முடிவு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டது.
-க.கா.செ
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|