சென்னைப் பல்கலை கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளின் விடைதாள் திருத்துதல்,மதிப்பெண்களைப்பதிவு செய்தல் போன்றவற்றில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அலுவலர்கள் 39 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி விடைத்தாள் திருத்திய 7 மையங்களில் கண்காணிப்பாளர்களாகப் பணிபுரிந்த கண்காணிப்பாளர்கள் மீது 17(பி) பிரிவிலும்,தனிஅதிகாரிகள் மற்றும் உதவி தனி அதிகாரிகள்மீது 17(ஏ) பிரிவிலும் தண்டனை வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|