12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் இன்று காலை தமிழகமெங்கும் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் செய்முறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த வாரம் 8ந் தேதி புதன்கிழமை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|