105 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பாட்டி!

Share this News:

கொல்லம் (06 பிப் 2020): கேரளாவில் 105 பாட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதித்து பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு, 205 மதிப்பெண் பெற்று அவர் சாதித்து உள்ளார். இதில் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

வயது முதுமை காரணமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார் பகீரதி அம்மா.. இதனால் கணிதம் மற்றும் மலையாளம் ஆகிய 3 பாட தேர்வு எழுதுவதற்கு 3 நாட்களை எடுத்துக்கொண்டதாகவும் எழுத்தறிவு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

105 வயதில் சாதித்த இந்த பாட்டிக்கு பாராட்டுகள் குவிகின்றன.


Share this News:

Leave a Reply