எங்கள் மீது மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (05 மே 2020): எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக மருத்துவ ஊழியர்களை கவுரவப்படுத்த மத்திய அரசு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: