ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

Share this News:

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ANI இடம் பிரத்தியேகமாகப் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான (MoS) இணை அமைச்சர் (MoS) ஜெனரல் VK சிங், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

“கியேவில் வசித்து வந்த இந்திய மாணவர் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதற்கிடையே எல்லோரும் கியேவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் முன்னதாகவே எச்சரித்திருந்தது.

மாணவர்கள் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்காக போலந்து எல்லையை அடைய முயற்சித்து வருகின்றனர்.

நான்கு மத்திய அமைச்சர்கள், ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய எம் சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் (ஓய்வு) விகே சிங் – உக்ரைனை ஒட்டிய நாடுகளில் உள்ள வெளியேற்ற முயற்சிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply