குவாரண்டீன் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என பெயரிட்ட தம்பதிகள்!

Share this News:

இம்பால் (03 ஜூன் 2020): தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழந்துள்ளனர் அந்த குழந்தையின் தம்பதிகள்.

மே 27 அன்று கோவாவிலிருந்து சிறப்பு ரயிலில் மணிப்பூர் வந்த பயணிகள் இமானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர் . அவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த பெண் மீது மருத்துவர்களால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் “அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை சிக்கல்கள் இல்லாமல் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள்” என்று காங்போக்பி மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பான மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாட்டின்லின் ஹாக்கிப் கூறினார்.

3.2 கிலோ எடையுள்ள இந்த குழந்தையை மகப்பேறு மருத்துவர் உட்பட இரண்டு மருத்துவர்கள் பிரசவித்தனர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அதிகாரிகளால் நியமிக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு குழந்தையின் பெற்றோர்கள் இமானுவேல் குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர்.


Share this News: