ஹோட்டலில் அடைத்து வைத்து வன்புணர்வு – பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

Share this News:

லக்னோ (12 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகாரில், “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி தேர்தலின்போது என்னை ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட எம்.எல்.ஏ குடும்பத்தினர் ஆறு பேர் என்னை வன்புணர்வு செய்தனர்” என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து படேஹி காவல் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply