முதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்!

Share this News:

திருவனந்தபுரம் (06 ஆக 2020): தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கேரளா முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ் அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாகவும், ஸ்வப்னா சுரேஷை, கேரள முதல்வருக்குத் தெரியும் எனவும் என்.ஐ.ஏ. தரப்பு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply