ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

Share this News:

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6075 பேர் உயிரிழந்த நிலையில், 1,04,107 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2587 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,329 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,316 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9542 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது


Share this News: