கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

Share this News:

புதுடெல்லி (19 ஜூன் 2020): உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 336 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,573 பேர் உயிரிழந்த நிலையில் 2,04,711 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5751 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60,838 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 52,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28641 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 49979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21341 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: