இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (22 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 212 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் மீண்டும் பரவி வருகிறது. இன்று புதிதாக 46,951 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,46,081 ஆக உயர்ந்தது.
புதிதாக 212 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11,51,468 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,34,646 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 95.96% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.66% ஆக குறைந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 4,50,65,998 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply