தொடர் வெறுப்புப் பிரச்சாரம் – பாஜக எம்.எல்.ஏவின் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்!

Share this News:

புதுடெல்லி (03 செப் 2020): பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

அதேபோல பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலதரப்பிலிருந்தும் புகார் எழுந்து வருகிறது

முக்கியமாக இந்தியாவின் பேஸ்புக் பாலிசி தலைவராக இருக்கும் அங்கி தாஸ் மீது அடுத்தடுத்து புகார்கள் வைக்கப்பட்டது. இவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற குழு பேஸ்புக்கிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தது. இது தொடர்பாக விளக்க கூட்ட விசாரணை நேற்று நடந்தது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் தொடர் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளதோடு, இனி இவர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியாது. என்றும் கூறியுள்ளது. அதேபோல இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply