முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (09 டிச 2021): விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டில்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.

ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவற்றை ஏற்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் தன் திட்டத்தை அனுப்பி வைத்தது. அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. அதையடுத்து புதிய திட்டத்தை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சக்யுக்த கிஷான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று (டிச.,09) போராட்டத்தை கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply