விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கோட்சே மற்றும் சாவர்க்கரின் படங்கள்!

Share this News:

ஷிவமோகா (10 செப் 2022): கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மகதஹ்மா காந்தியை கொலை செய்த கோட்சே மற்றும் சங்பரிவார் நிறுவனர் தலைவர் சாவர்க்கர் ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் இந்து மகாசபை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியது. பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சாவர்க்கர் மற்றும் கோட்சே மற்றும் பிற இந்துத்துவா தலைவர்களின் படங்களை ஏந்தியிருந்தனர்.

சங்பரிவார் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகளால் இந்து பண்டிகைகளை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கோட்சேயின் படத்துடன் இந்து மகாசபையின் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகின்றன.


Share this News:

Leave a Reply