புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

Share this News:

ஜம்மு (26 செப் 2022): ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார்.

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் இன்று வெளியிட்டார்.

தனது கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயரிட்டுள்ள குலாம் நபி, கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களுடன் கூடிய கொடியை செய்தியாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் கட்சி கொடி குறித்து பேசிய குலாம் நபி ஆசாத், கட்சி கொடியில் உள்ள மஞ்சள் நிறம், படைப்பாற்றல், வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கிறது; வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது; நீலம், சுதந்திரம், வெளிப்படை, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரை வரம்புகளைக் குறிக்கிறது. என்றார்.


Share this News:

Leave a Reply