மத்திய அரசு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

Share this News:

புதுடெல்லி (01 பிப் 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக் குறைந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். பால், பழங்கள், காய்கறிகளை கொண்டுச் செல்ல தனி ரயில் இயக்கப்படும். 2025ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக்க இலக்கு நிர்ணயம்.

விவசாயத்துறைக்கு ரூ.2.83 கோடி லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழாய் வழியே சமையல் எரியாவு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

அதன்படி, எரிவாயு குழாயை எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடங்கள் 16,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும்.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

தேசிய எரிவாயு குழாய் தட திட்டம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.

மின்சாரத்தைக் கணக்கெடுக்கும் மின்மீட்டர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.
தனியார் சார்பில் தகவல் மைய பூங்காக்கள் அமைக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இணைக்க நடவடிக்கை. அதன்படி, 1 லட்சம் கிராமங்களுக்கு ஃபைபர் ஆப்டிகள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேமிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.

ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்படும்.

அரசு – தனியார் பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம்.

ரயில் பாதையை ஒட்டிய ரயில் துறைக்கு சொந்தமான நிலப்பரப்புகளில் சூரிய மின் உற்பத்தி செய்யப்படும்.

27 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.

சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ப்படும்.

பெங்களூருவில் ரூ.18,600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.

குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம்

தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விரைவில் சரக்கு போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படும். நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை – பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும். 2000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விரைவில் சரக்கு போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படும். நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை – பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும். 2000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

உத்தரப்பிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி பயன்று சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் விரைவில் புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply