எரிக்கப்பட்ட மசூதியை காப்பற்ற முயன்ற இந்துக்கள் – மசூதி இமாம் தகவல்!

Share this News:

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி அசோக் நகரில் உள்ள மசூதிக்கு இந்துத்துவ வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தியபோது அவர்களிடமிருந்து மசூதியைக் காப்பாற்ற அப்பகுதியின் இந்துக்கள் போராடியதாக மசூதி இமாம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ வன்முறையாளர்கள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்.

இந்த வன்முறையின்போது டெல்லி அசோக் நகர் மசூதி ஒன்று இந்துத்வா வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு மசூதி முழுவதும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் வீடியோ ஒன்றும் வைரலானது.

அச்சமயம் அந்த மசூதியை இந்துத்துவ வெறியர்களிடமிருந்து காப்பாற்ற அப்பகுதி இந்துக்கள் முயற்சி மேற்கொண்டதாக மசூதி இமாம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply