இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு!

Share this News:

மும்பை (14 பிப் 2022): இன்று (திங்கள் கிழமை) இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் பிரச்னை எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அபாயத்தால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 17,000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 451 புள்ளிகள் சரிந்து 16,923 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,524 புள்ளிகள் சரிந்து 56,628 புள்ளிகளில் வணிகம் நடைபெறுகிறது.


Share this News:

Leave a Reply