5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஜோ பைடன்!

Share this News:

வாஷிங்டன் (08 நவ 2020): பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 46வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தஞ்சமடைந்துள்ள 1.1 கோடி பேர் உள்ளனர். அதில் 5 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

எனவே ஆண்டுதோறும் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து தஞ்சமடைந்தவர்கள் தான், அந்நாட்டை வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்கும் அளப்பறியது. இதுதொடர்பாக ஜோ பைடன் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியுரிமை சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற பைடன் நடவடிக்கை எடுப்பார். இதன்மூலம் 1.1 கோடி பேரும் அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை திட்டத்தின் கீழ் குடும்பமாக ஒருங்கிணையும் அம்சத்திற்கு பைடன் அரசு அதிக முக்கியத்துவம் தருவார். இதன்மூலம் குடும்பமாக விசா கிடைக்காமல் தவிப்பவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும். ஓராண்டில் வெளிநாடுகளில் இருந்து தஞ்சமடையும் அகதிகளுக்கான அனுமதி அமெரிக்காவில் 1,25,000ஆக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply