சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை – கர்நாடக அரசு உத்தரவு!

Share this News:

பெங்களூரு (17 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுபான்மை நலன், ஹஜ் மற்றும் வக்ஃப் துறை செயலாளர் மேஜர் பி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு உத்தரவு சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் மௌலானா ஆசாத் மாதிரிப் பள்ளிகளுக்கும் (ஆங்கில மீடியம்) பொருந்தும். )

சில சிறுபான்மை நிறுவனங்களில் மாணவர்களுக்கான சீருடை ஹிஜாப் என்பதால் சிறுபான்மை நிறுவனங்களில் ஹிஜாப் பயன்படுத்துவதை இந்த உத்தரவு திறம்பட தடை செய்கிறது. அரசு உத்தரவின்படி, மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வளாகத்திற்கு வரலாம் ஆனால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாது.

சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் வகுப்பறைகளில் ஹிஜாப், தாவணி, காவி சால்வை மற்றும் பிற மத சின்னங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கவும், மாணவர்களை விரைவில் வகுப்புகளுக்குத் திரும்ப அனுமதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் வரை, அனைத்து மாணவர்களும் அவர்களின் மதம் அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் காவி சால்வை , ஹிஜாப், மதக் கொடிகள் போன்றவற்றை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது .” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply