வீடு திரும்பினார் மன்மோகன் சிங்!

Share this News:

புதுடெல்லி (12 மே 2020): உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், ஞாயிறு இரவு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு பாதிப்பு இல்லையென உறுதியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


Share this News: