ஏற்கனவே கொரோனா பாதித்த அமைச்சருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

Share this News:

மும்பை (24 மார்ச் 2021): ஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30,535 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த வருடம் ஜூன் மாதத்தில் முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட, சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply